தலைப்புச் செய்தி

Wednesday, March 21, 2012

பகவத் கீதை தடை வழக்கு: நாளை இறுதித் தீர்ப்பு


மாஸ்கோ : பகவத் கீதையை தடை செய்யும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என, ரஷ்யாவின் டோம்ஸ்க் நகர ஐகோர்ட் இன்று தெரிவித்தது.
பகவத் கீதை - உள்ளது உள்ளபடி' என்ற மொழிபெயர்ப்பு பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக இருப்பதால், அதைத் தடை செய்யும்படி, டோம்ஸ்க் மண்டல அரசுத் தரப்பு முதன்மை வழக்கறிஞர்கள், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 
கடந்த 6ம் தேதி விசாரிக்கப்பட்ட இவ்வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்படும் என, டோம்ஸ்க் ஐகோர்ட் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று, பிரதிவாதிகளான இந்துக்கள் தரப்பு விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், இறுதித் தீர்ப்பை நாளை தள்ளி வைத்து, ஐகோர்ட் உத்தரவிட்டது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பகவத் கீதை தடை வழக்கு: நாளை இறுதித் தீர்ப்பு"

Post a Comment